வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
முதல் வணக்கம் முதல்வனுக்கே! - Mudhal Vanakkam Mudhalvanukke! |
முதல் வணக்கம் முதல்வனுக்கே! ![]() பதிப்பாளர்: விகடன் பிரசுரம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு இல்லை விலை: ரூ. 110.00 தள்ளுபடி விலை: ரூ. 110.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘பிள்ளையார் சுழிபோட்டு எதையும் தொடங்கு’ என்பது எதற்காக? ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே! அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம்? அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன? ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன? அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் விநாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா? எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும்? இந்தப் புத்தகத்தில் எல்லாம் உள்ளது. சக்தி விகடனில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. கணநாதனின் கடைக்கண் பார்வை கிடைக்கப் பக்கத்தைப் புரட்டுவோம் வாருங்கள்! நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |